நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை
பைரவர் எட்டுபடை வீடுகளுக்குச் சென்று தரிசனம் செய்பவர்களுக்கு ,வாழ்க்கை முழுவதும் சிரமங்கள்,துயரங்கள்,கஷ்டங்கள்,தோல்விகள் இராது

பிரதோஷ மகிமை





Read more

திருமணிச்சேறை உடையார் கோயில், பெரணமநல்லூர், இஞ்சிமேடு

இறைவன் மணிச்சேறை உடையார்
தீர்த்தம் சுனை தீர்த்தம்
கிராமம்/நகரம் இஞ்சிமேடு
மாவட்டம் திருவண்ணாமலை
மாநிலம் தமிழ்நாடு
வரலாறு
                  இமயமலைக்கு நிகராக “பெரியமலை’ என்று ஒரு மலை இருந்தது. அந்த மலை அகத்தியர் காலடி பட்டு பூமிக்கடியில் சென்றுவிட்டது. தரை மட்டமான அந்த பகுதியில், ஒரு முனிவர் நவபாஷாணத்தால் சிவலிங்கம் செய்து வழிபட்டு வந்தார். இவரது பக்தியை சோதிக்க நினைத்த இறைவன், ஒரு யானையை அனுப்பினார். முனிவர் தியானத்தில் இருந்த போது, அந்த யானை அருகிலிருந்த குளத்திலிருந்து நீரை எடுத்து முனிவரின் மேல் தெளித்து விளையாடியது. ஆனால், அவரது தியானம் கலையவில்லை. யானை முனிவரின் அருகே சென்றபோது, ஒரு நெருப்பு வளையம் உண்டாகி, அருகில் செல்ல விடாமல் தடுத்தது. தவத்தை மெச்சிய சிவன், முனிவரின் முன்பு தோன்றி வரம் கேட்க சொன்னார். பெரியமலையில் இருந்து அருள் புரிய வேண்டும் என முனிவர் வேண்டிக் கொண்டார். இறைவனும் பெரியமலையில் தங்கினார். அந்த முனிவர் நவபாஷாண லிங்கம் ஒன்றை இங்கு பிரதிஷ்டை செய்தார்.
திருவிழா
                 மகாசிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குஉத்திரம், திருக்கார்த்திகை.
சிறப்பு
                இங்கு சிவன் நவபாஷாண லிங்கமாக அருள்பாலிக்கிறார்.
திறக்கும் நேரம்
                   காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
பொது தகவல்
                     பழநியில் முருகனுக்கு போகர் சித்தர் நவபாஷாணத்தால் சிலை அமைத்தது போல, திருவண்ணாமலை மாவட்டம் இஞ்சிமேட்டில் உள்ள திருமணிச்சேறை உடையார் கோயிலில் நவபாஷாண லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரார்த்தனை
                     பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டுதான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக தீர்த்தத்தை அருந்தினால் நோய்கள் குணமாகிறது. பாம்புக்கடிக்கு சிறந்த மருந்தாக இந்த தீர்த்தம் பயன்படுகிறது. அத்துடன் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இந்த தீர்த்தத்தை அருந்தினால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்ற பலனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.
நேர்த்திக்கடன்
                     சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
தல சிறப்பு
                     இந்தக் கோயிலில் மூதாதையர்களுக்கு திதி கொடுப்பதால் ஏழேழு ஜென்மத்திற்கும் பலன் உண்டு. சிவபார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்த போது, சிவன் அகத்தியரிடம் பூமியை சமநிலை செய்யுமாறு கூறினார். அவர் தென்பகுதிக்கு வரும் போது இஞ்சிமேட்டில் வான் நோக்கி உயர்ந்திருந்த பெரியமலையின் மீது ஏறி நின்றார். அடுத்த கணம் இமயமலைக்கு நிகராக இருந்த பெரியமலை பூமியில் அழுந்த, அதன் நுனி மட்டும் வெளியில் நின்றது. அன்று முதல் பெரிய மலை “தென் கயிலாயம்’ என அழைக்கப்படுகிறது.
சிலாத்தியரும் இஞ்சி மேடும்
                          சிலாத்தியர் என்ற முனிவர் தனது கடும் தவத்தால் உடலுடனேயே சொர்க்கம் செல்லும் வரத்தை சிவனிடம் பெற்றார். வழியில் இவரைப் பார்த்த நாரதர், “”உமது மூதாதையர்களுக்கு யாரும் சரிவர திதி கொடுக்காததால் ஆவியாக அலைந்து கொண்டிருக்கின்றனர்,” என்றார். சிலாத்தியர் “மிஞ்சி’என்ற தர்ப்பை புல்லை வைத்து, மூதாதையர்களுக்கு திதி கொடுத்தார். இந்த இடமே காலப்போக்கில் “இஞ்சி’ மேடானது என்கிறார்கள். அன்று முதல் மூதாதையர்களுக்கு, அமாவாசை தோறும் திதி கொடுக்கும் முறை வழக்கத்திற்கு வந்தது. பெரியமலையில் உள்ள சுனை தீர்த்தத்தை கொண்டு தான் நவபாஷாண லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
முகவரி

                        அருள்மிகு திரு மணிச்சேறை உடையார் கோயிலில், பெரணமநல்லூர், இஞ்சிமேடு, திருவண்ணாமலை மாவட்டம்.



Read more

முற்பிறவி பாவங்கள் அனைத்தையும் போக்கிடும்


முற்பிறவி பாவங்கள் அனைத்தையும் போக்கிடும் " குடவாசல்

மூலவர் கோணேஸ்வரர். அம்பிகை பெரியநாயகி. ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத் தல அமிர்த தீர்த்தத்தில் நீராட முற் பிறவி பாவங்கள் அனைத்தும் தீர்கின்றது. தாகத்திற்கு அருந்தியவர் புண்ணியம் பெருகிறார். இருக்கும் திசை நோக்கி ஓரடி எடுத்து வைப்பவர் கங்கா ஸ்நானம் செய்த பலன் அடைகிறார். சிவராத்திரியன்று ஸ்நானம் செய்ய 16,000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கின்றது. மார்கழி திருவாதிரையன்று நீராடி தரிசிப்பவர் தேவர்களாகின்றனர். கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள


Read more